TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

வாடகை வீட்டில் தனிமை வாழ்க்கை... உறவினர்கள் யாரும் இல்லாமல் எஸ். ஜானகி இறுதி நாட்களை எப்படி கழித்தார்?

Share This Article:

20 மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்களைப் பாடி இசை உலகில் அழியாத தடம் பதித்த எஸ். ஜானகி, தனது இறுதி நாட்களை மைசூரில் ரசிகரின் வாடகை வீட்டில் ஆன்மீக வாழ்க்கையுடன் கழித்தார். அவரது இறுதி வாழ்க்கை குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாடகை வீட்டில் தனிமை வாழ்க்கை... உறவினர்கள் யாரும் இல்லாமல் எஸ். ஜானகி இறுதி நாட்களை எப்படி கழித்தார்?

இந்திய திரையிசை உலகின் இசைக் குயிலாக போற்றப்பட்ட எஸ். ஜானகியின் மறைவு இசை ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்துள்ள அவர், தனது இனிமையான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர். நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், 30-க்கும் மேற்பட்ட மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ள எஸ். ஜானகி, இந்திய இசை வரலாற்றில் தனக்கென அழியாத இடத்தைப் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் அவர் பாடிய எண்ணற்ற பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கின்றன. குறிப்பாக, '16 வயதினிலே' திரைப்படத்தில் இடம்பெற்ற "செந்தூரப் பூவே" பாடலுக்கும், 'தேவர் மகன்' திரைப்படத்தின் "இஞ்சி இடுப்பழகி" பாடலுக்கும் தேசிய விருதுகளை வென்று தனது திறமையை நிரூபித்தார். காதல், சோகம், பக்தி, தாலாட்டு என எந்த உணர்வாக இருந்தாலும் தனது குரலால் உயிர் கொடுத்த பாடகி என்ற பெருமை அவருக்கே உரியது.

Content image

ஆனால், இசை உலகில் பல உச்சங்களைத் தொட்ட இந்த மகத்தான கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கை பல சோகங்களையும் சந்தித்தது. அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா மாரடைப்பால் உயிரிழந்தது ஜானகிக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. அந்த இழப்பிலிருந்து முழுமையாக மீள முடியாமல் போன அவர், பொதுவாழ்க்கையில் இருந்து மெதுவாக விலகத் தொடங்கினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் மைசூருவில் வசித்து வந்த எஸ். ஜானகி, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், இசை நிகழ்வுகளுக்கு செல்வதையும் பெரும்பாலும் தவிர்த்தார். தனக்கு மிகவும் பிடித்த நகரமான மைசூருவில் அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற விருப்பத்தால் அங்கேயே குடியேறினார். தனது சொந்த ஊரை விட்டு மைசூரை தேர்வு செய்தது அந்த நகரின் அமைதியும் ஆன்மீகச் சூழலும் தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

அவரது இறுதி வாழ்க்கையில் மிகவும் உருக்கமான விஷயம் என்னவென்றால், மைசூரில் அவருக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை. இருந்தபோதிலும், ஒரு ரசிகரின் அன்புதான் அவருக்கு குடும்பமாக மாறியது. மைசூரின் போகடி பகுதியில் உள்ள ஒரு ரசிகரின் வாடகை வீட்டில்தான் எஸ். ஜானகி தனது இறுதி நாட்களை கழித்தார். அந்த வீட்டின் உரிமையாளரான பவ்யா, எஸ். ஜானகியின் தீவிர ரசிகர். ஜானகிக்கு தேவையான அனைத்து வசதிகளையும், அன்றாட தேவைகளையும், மருத்துவ கவனிப்புகளையும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்போடு கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

Content image

பாடும் பணியில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பிறகு, எஸ். ஜானகி தனது நேரத்தை ஆன்மீகத்தில் செலவிடத் தொடங்கினார். தினமும் பூஜை செய்வது, பக்தி பாடல்களைக் கேட்பது, தியானம் செய்வது போன்றவற்றை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதோடு, மைசூரைச் சுற்றியுள்ள பல்வேறு புகழ்பெற்ற கோவில்களுக்கும் அடிக்கடி சென்று வழிபட்டு வந்தார்.

குறிப்பாக நஞ்சன்கூட்டில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில், மைசூரின் புகழ்பெற்ற சாமுண்டேஸ்வரி அம்மன் கோவில், யோக நரசிம்மசுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு அவர் தொடர்ந்து சென்று வந்ததாக கூறப்படுகிறது. மகனை இழந்த துயரத்தில் இருந்து மன அமைதியை பெற ஆன்மீகமே அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்ததாக நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலப் பிரச்சினைகளும் அவரை அவதிப்படுத்தி வந்தன. இருப்பினும், எளிமையான வாழ்க்கை முறையை கடைபிடித்து, அதிகமாக வெளியில் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இசையை நேசித்த அவர், பழைய பாடல்களைக் கேட்டு நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

Content image

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் எஸ். ஜானகி உயிரிழந்ததாக மைசூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அவரது மறைவு செய்தி வெளியாகியவுடன் இந்தியா முழுவதும் இருந்து ரசிகர்கள், இசைக் கலைஞர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

குடும்பத்தினரின் அறிவிப்பின்படி, எஸ். ஜானகியின் உடல் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 4 மணி வரை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன. மேலும், அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

20 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, பல தலைமுறைகளை தனது குரலால் கட்டிப்போட்ட எஸ். ஜானகி, வாழ்நாளின் இறுதியில் ஆடம்பர வாழ்க்கையை அல்ல, அமைதி, ஆன்மீகம் மற்றும் எளிமையைத் தேர்ந்தெடுத்தார். உறவினர்கள் யாரும் இல்லாத நகரத்தில், ஒரு ரசிகரின் அன்பே அவருக்கு குடும்பமாக இருந்தது. அவர் விட்டுச் சென்ற பாடல்கள் என்றென்றும் இசை ரசிகர்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்; அவரது எளிமையான வாழ்க்கையும் மனிதநேயமும் என்றும் நினைவுகூரப்படும்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions