TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கண்கள், முகம், சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

Share This Article:

கண்கள் மற்றும் முகத்தில் வீக்கம், சிறுநீரின் நிறத்தில் மாற்றம், பசியின்மை, அதிக சோர்வு உள்ளிட்ட சில அறிகுறிகள் சிறுநீரக நோய்களின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக பரிசோதனை செய்வது அவசியம்.

கண்கள், முகம், சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

சிறுநீரகங்கள் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, கழிவுப் பொருட்கள் மற்றும் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றும் பணியை அவை மேற்கொள்கின்றன. இந்த உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால், சிறுநீரக நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் வெளிப்படையாக தெரியாமல் இருப்பதால், அவற்றை சரியான நேரத்தில் கண்டறிவது மிகவும் முக்கியம்.

மயக்கவியல் மற்றும் வலி மருத்துவ நிபுணரான டாக்டர் குணால் சூட், சிறுநீரக நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து பகிர்ந்துள்ள தகவலின்படி, உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் இந்த நோயின் ஆரம்ப எச்சரிக்கை சிக்னல்களாக இருக்கலாம்.

Content image

கணுக்கால்களில் வீக்கம்:

சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது உடலில் நீரும் உப்பும் தேங்கத் தொடங்கும். இதனால் கணுக்கால்கள் மற்றும் கால்களின் கீழ்பகுதியில் வீக்கம் (Edema) ஏற்படலாம். இதனுடன் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், தசைப்பிடிப்பு, சுவாசக் குறைபாடு மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகளும் தோன்றலாம்.

பசியின்மை மற்றும் அதிக சோர்வு:

சிறுநீரகங்களின் செயல்பாடு குறையும்போது இரத்தத்தில் கழிவுப் பொருட்கள் அதிகரிப்பதால் பசியின்மை, வாந்தி உணர்வு போன்றவை ஏற்படலாம். மேலும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைவதால் ரத்தசோகை உருவாகி, எந்த வேலை செய்யாவிட்டாலும் அதிக சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படலாம்.

Content image

சிறுநீரின் நிறத்தில் மாற்றம்:

சாதாரணமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் சிறுநீர், தேநீர் நிறம் அல்லது அடர் பழுப்பு நிறமாக மாறினால் அது சிறுநீரக பாதிப்புக்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில் சிறுநீரில் இரத்தம் கலப்பதாலும் அல்லது தசை சேதத்தாலும் இந்த மாற்றம் ஏற்படலாம்.

கண்கள் மற்றும் முகத்தில் வீக்கம்:

காலையில் எழுந்தவுடன் கண்களுக்குக் கீழ் வீக்கம் அல்லது முகம் வீங்கியிருப்பது, உடலில் அதிகப்படியான திரவம் தேங்குவதையோ அல்லது புரதச்சத்து இழப்பையோ குறிக்கலாம். இது சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.

சிறுநீரில் நுரை:

சிறுநீர் கழிக்கும் போது தொடர்ந்து நுரை அதிகமாக தோன்றினால், அது சிறுநீரக வடிகட்டிகள் (Kidney Filters) சேதமடைந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதனால், இரத்தத்தில் இருக்க வேண்டிய அல்புமின் (Albumin) என்ற புரதம் சிறுநீருடன் வெளியேறி நுரை உருவாகும்.

Content image

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

கண்கள் அல்லது முகத்தில் தொடர்ந்து வீக்கம், கணுக்கால் வீக்கம், சிறுநீரின் நிறம் அல்லது தன்மையில் மாற்றம், அதிக சோர்வு, பசியின்மை, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீரில் நுரை போன்ற அறிகுறிகள் இருந்தால், அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.



( இந்த அறிகுறிகள் சிறுநீரக நோய்களுக்கு மட்டுமல்லாமல், பிற உடல்நலப் பிரச்சினைகளாலும் ஏற்படக்கூடும். எனவே, தானாக முடிவு செய்யாமல் மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான பரிசோதனைகளை செய்து, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது சிறுநீரகங்களை பாதுகாக்கும் சிறந்த வழியாகும் )

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions