TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பாக்கெட்டில் யார் படம்? ஓபிஎஸ் - செங்கோட்டையன் இடையே காரசார விவாதம்

Share This Article:

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. பட்ஜெட் திட்டங்கள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து இருவரும் கருத்துகளை முன்வைத்தனர்.

பாக்கெட்டில் யார் படம்? ஓபிஎஸ் - செங்கோட்டையன் இடையே காரசார விவாதம்

தமிழக அரசின் பட்ஜெட்டில் திருப்புமுனை பக்கங்கள் எல்லாம் திராவிட மாடல் அரசின் சாதனைகளே தெரிவிக்கின்றன என பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று தொடர்ந்தது. சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அப்போது, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் அரசின் நிதிநிலை அறிக்கையானது ஏமாற்றத்தின் வடிவமாக இருப்பதாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், அரசு மன்றத்திலிருந்து துறை ரீதியான கூட்டம் நடத்தி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Content image

மேலும், கடந்த காலங்களில் 6 சிலிண்டர் என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றம் அடைந்ததாகவும், மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்கும் நிதி ஒதுக்கீடு திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பேரவையில் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன் என்றும், தேடிக்கொண்டே இருக்கிறேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த 5 ஆண்டுகளில் சொன்னவற்றை நிறைவேற்றுவோம் என்றும், 3 மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது என்றும் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே பேரவையில் காரசாரமான விவாதம் ஏற்பட்டது.பின்னர், சட்டசபையில் படம் வைப்பது தொடர்பான நகைச்சுவையான விவாதமும் இடம்பெற்றது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறுகையில், முதலில் இடம் மாறியது செங்கோட்டையன்தான் என்றார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions