புகைப்படக் கலைஞரை படம் எடுத்த முதலமைச்சர் விஜய்
உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் புகைப்படக் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
உலக புகைப்பட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புகைப்படக் கலையின் வரலாறு, அறிவியல் மற்றும் அதன் தாக்கத்தை போற்றும் வகையில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
1839-ஆம் ஆண்டு பிரான்சின் லூயிஸ் டாகர் மற்றும் ஜோசப் நைஸ்போர் நியேப்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ‘டாக்யூரோடைப்’ என்ற புகைப்பட முறையை கண்டுபிடித்தனர். இதன் பின்னர் புகைப்படக் கலை உலகம் முழுவதும் வேகமாக வளர்ச்சி பெற்றது.
இந்த நிலையில், உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் புகைப்படக் கலைஞர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், புகைப்படக் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
புகைப்படக் கலைஞர்களுடன் முதலமைச்சர்
நிகழ்ச்சியில் புகைப்படக் கலைஞர்களுடன் முதலமைச்சர் விஜய் கலந்துரையாடியதுடன், அவர்களை பாராட்டியும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். தொடர்ந்து, புகைப்படக் கலைஞர்கள் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதனையடுத்து, முதலமைச்சர் விஜய்யும் புகைப்படக் கலைஞர் ஒருவரின் கேமராவை பயன்படுத்தி அவரை புகைப்படம் எடுத்தார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், தற்போது சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் யை கிளிக் செய்யவும்
https://x.com/CMOTamilnadu/status/2090640680293114145/video/1

0 Comments
No comments yet. Be the first to comment.