TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"லஞ்சத்திற்கு எதிரான முதலமைச்சரின் முழக்கம் வெறும் சினிமா வசனம் தானா?" - நெல் கொள்முதல் நிலைய ஊழலைச் சுட்டிக்காட்டி டிடிவி தினகரன் சாடல்!

Share This Article:

நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹50 லஞ்சம் பெறப்படுவதாகக் கூறி, தமிழக முதல்வர் விஜயின் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தை வெறும் "சினிமா வசனம்" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"லஞ்சத்திற்கு எதிரான முதலமைச்சரின் முழக்கம் வெறும் சினிமா வசனம் தானா?" - நெல் கொள்முதல் நிலைய ஊழலைச் சுட்டிக்காட்டி டிடிவி தினகரன் சாடல்!

மூட்டை ஒன்றுக்கு ₹50 வரை லஞ்சம்:

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், ஒரு நெல் மூட்டைக்கு ₹50 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லைக் கொள்முதல் செய்ய முடியும் என்று அங்குள்ள அதிகாரிகள் கறாராகத் தெரிவிப்பதாக விவசாயிகள் மிகுந்த வேதனையுடனும் ஆதங்கத்துடனும் பதிவு செய்துள்ளனர்.

மழையில் நனையும் நெல் மூட்டைகள் - விவசாயிகள் கண்ணீர்:

தமிழக அரசு அறிவித்த முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை நம்பி ஏமாந்து கடனாளியாகியுள்ள விவசாயிகள், பெரும் சிரமத்திற்கு மத்தியில் விளைவித்த நெல்லைக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் லஞ்சம் கேட்டு உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுப்பதால், கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளின் கண்ணீரையும் உழைப்பையும் வீணாக்கும் அரசு நிர்வாகம், நெல்லுக்கு அரசு விலை நிர்ணயம் செய்வதற்கு முன்பாகவே, தங்களின் லஞ்சத் தொகையை முன்கூட்டியே நிர்ணயிக்கும் அவல நிலையை உருவாக்கியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

Content image

தமிழக அரசு மீதான நம்பிக்கை இழப்பு:

இதே கடலூர் மாவட்டத்திலுள்ள கொள்முதல் நிலையங்களில் கடந்த மாதம் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆய்வுக்கு வந்தபோது, லஞ்ச வசூலில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறு நடவடிக்கை எடுத்த பின்னரும், மீண்டும் அதேபோன்று லஞ்ச வசூல் தடையின்றித் தொடர்ந்து நடைபெற்று வருவது, த.வெ.க. அரசின் மீது விவசாயிகள் வைத்துள்ள நம்பிக்கையை முற்றிலுமாக இழக்கச் செய்துள்ளது.

வீர வசனங்களால் ஊழலை ஒழிக்க முடியாது:

மேடைகளில் பேசப்படும் வீர வசனங்களால் ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்பதை அரசு இனியாவது உணர வேண்டும். கடுமையான கண்காணிப்பும், உடனடித் துறை ரீதியான நடவடிக்கைகளும் மட்டுமே ஊழலை ஒழிக்கும். எனவே, விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்சப் புகாருமின்றி உடனடியாகவும், துரிதமாகவும் கொள்முதல் செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என த.வெ.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions