சோனியா காந்தியின் புத்தகத்தை தடுத்து நிறுத்துவது கருத்துச் சுதந்திரத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பானது - மாணிக்கம் தாகூர்
சோனியா காந்தியின் வாழ்க்கை தியாகத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார். உலகெங்கும் அசல் வடிவில் வெளியாகும் அவரது புத்தகத்தை, இந்தியாவில் மட்டும் Penguin Random House India நிறுவனம் சில மாற்றங்களுடன் வெளியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. மோடி ஆட்சிக்காலத்தில் இந்தியப் பகுதிகளை மோடி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சீனா ஆக்கிரமித்தது தொடர்பான பகுதிகளை புத்தகத்திலிருந்து நீக்குமாறு பதிப்பகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புதிய புத்தகம் வெளியாவது தொடர்பாகப் பதிப்பகத்திற்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இத்தகைய செயல்கள் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
"சோனியா காந்தியின் வாழ்க்கை என்பது தியாகத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அவர் இந்த நாட்டிற்காக ஆற்றிய பணிகளின் தூய்மையும் கண்ணியமும் என்றும் போற்றத்தக்கது. இப்படிப்பட்ட சிறப்புமிக்க ஒரு மூத்த அரசியல் தலைவரின் புத்தகத்தை, அரசியல் அழுத்தங்கள் கொடுத்து தடுத்து நிறுத்த முயல்வது அப்பட்டமான கருத்துச் சுதந்திரப் படுகொலையாகும்.
பெங்குவின் வேர்ல்டுவைட் (Penguin Worldwide) நிறுவனம், சோனியா காந்தியின் வரவிருக்கும் இந்த புதிய புத்தகத்தை எந்தவித மாற்றமும் செய்யாமல், அதன் அசல் வடிவிலேயே உலகம் முழுவதும் வெளியிடத் தயாராக உள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் அதனை வெளியிடுவதற்கு 'பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா' (Penguin Random House India) நிறுவனம் சில குறிப்பிட்ட மாறுதல்களைச் செய்ய விரும்புவதாகத் தெரிகிறது.
இதன் பின்னணியில் இருக்கும் உண்மையான பிரச்சனை என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்தியப் பகுதிகளை மோடி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சீனா ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான முக்கியமான பகுதிகள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அந்தப் பகுதிகளை முற்றிலும் நீக்குமாறு பெங்குவின் இந்தியா பதிப்பகத்தின் மீது கடுமையான அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது முற்றிலும் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் ஒரு கொடூரமான தாக்குதலாகும். உண்மைகளை இந்திய மக்களிடமிருந்து ஏன் மறைக்க வேண்டும்? அரசியல் அழுத்தங்களின் பேரில் வரலாற்று உண்மைகளை மாற்றுமாறு பதிப்பகங்களை மோடி அரசு நிர்பந்திக்கிறதா? இந்தியாவில் அச்சிடப்படும் ஒரு புத்தகத்தில் கூட உண்மையை எழுதுவதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவலநிலை ஏன் உருவாக வேண்டும்?" என்று மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில் மிகக் காட்டமாகத் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.