TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பெரம்பூர் மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்: முதல்-அமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் நன்றி!

Share This Article:

சென்னை பெரம்பூர் பகுதியில் கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெருவை இணைக்கும் புதிய சாலை அமைக்கப்பட்டதால், 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

பெரம்பூர் மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்: முதல்-அமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் நன்றி!

பல ஆண்டு கோரிக்கை:

கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெரு இடையே இதுவரை போதிய சாலை வசதி இல்லாததால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாய நிலை இருந்து வந்தது. இதனால், இரு தெருக்களையும் நேரடியாக இணைக்கும் வகையில் ஒரு புதிய பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களின் இந்த நீண்டநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெரு இடையே புதிய பாதை ஏற்படுத்தப்பட்டு, தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் வரவேற்பு & முதல்வருக்கு நன்றி:

இந்தப் புதிய சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மாணவர்கள் எளிதாகப் பள்ளிக்குச் செல்லவும், பொதுமக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காகச் சென்று வரவும் இருந்த சிரமங்கள் முற்றிலும் குறைந்துள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் தங்களின் மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.


Content image

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை வசதி அமைக்க வேண்டும் என்பது எங்களது 30 ஆண்டுகால நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக முதல்-அமைச்சர் விஜய்க்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.

மேலும், பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு இனி முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கழிவுநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுதல், பழுதடைந்த அல்லது எரியாத தெருவிளக்குகளைக் கண்டறிந்து சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் என்றும், அனைத்துப் பகுதிகளிலும் தேவையான சாலை வசதிகள் தடையின்றி ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions