நாடாளுமன்றத்தில் கனிமொழி ஆவேசம்: "தென் மாநிலங்களுக்கு இது தண்டனையா?"
"தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்!" - நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கனிமொழி! தொகுதி மறுவரையறைக்கு கடும் எதிர்ப்பு! புதுடெல்லி: லோக்சபாவில் இன்று நடைபெற்ற தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) குறித்த விவாதத்தில் திமுக எம்.பி கனிமொழி அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், "மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தி, மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு, தொகுதி மறுவரையறை என்பது வழங்கப்படுகின்ற தண்டனையா?" என்று ஆவேசமாக வினாவினார்.
மேலும், "நாட்டின் வளர்ச்சிக்காக ஒத்துழைத்த மாநிலங்களின் குரலை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. எங்களின் உரிமைகளுக்காகத் தமிழ்நாடு எப்போதும் போராடும், இறுதியில் தமிழ்நாடு வெல்லும்" என்று அவர் முழக்கமிட்டார். தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க முற்படும் இந்த மசோதா, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் தனது உரையில் பதிவு செய்தார். கனிமொழி அவர்களின் இந்த உரை தற்போது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.