TBC News
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை! பீகாரில் புதிய சரித்திரம்: முதல் முறையாக பாஜக-வைச் சேர்ந்தவர் முதலமைச்சராகப் பதவியேற்பு! செங்கப்பள்ளி சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட மக்கள் கடல்: கோவை தேசிய நெடுஞ்சாலையை அதிரவைத்த விஜய்! தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.1,13,000-ஐ கடந்து புதிய உச்சம்! மாலை அணிவித்து வாக்கு சேகரிப்பு: வில்லிவாக்கத்தில் கார்த்திக் மோகன் தீவிர பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

முடிவுக்கு வரும் அனல் பறக்கும் பிரச்சாரம்: நாளை மாலை 5 மணியுடன் தமிழகத்தில் அமைதியாகிறது தேர்தல் களம்!

Share This Article:

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அனல் பறக்கும் பிரச்சாரம் நாளை ஓய்வு - ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு! சென்னை: தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான உச்சகட்ட பிரச்சாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.

முடிவுக்கு வரும் அனல் பறக்கும் பிரச்சாரம்: நாளை மாலை 5 மணியுடன் தமிழகத்தில் அமைதியாகிறது தேர்தல் களம்!

முடிவுக்கு வரும் பரப்புரை: கடந்த சில வாரங்களாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் புதிய கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ரோடு ஷோக்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தல் எனத் தமிழகமே அரசியல் திருவிழா கோலம் பூண்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, வாக்கெடுப்பு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே அனைத்து விதமான பொதுப் பிரச்சாரங்களும் நிறுத்தப்பட வேண்டும். இதன்படி, நாளை மாலை 5 மணிக்கு மேல் வெளிப்படையான பிரச்சாரங்களில் ஈடுபட அனுமதி கிடையாது.

வாக்குப்பதிவு எப்போது?

பிரச்சாரம் ஓய்வு: ஏப்ரல் 21, மாலை 5 மணி

வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 23 வியாழக்கிழமை

வாக்கு எண்ணிக்கை: மே 4 திங்கட்கிழமை

கட்டுப்பாடுகள் தீவிரம்: நாளை மாலை 5 மணிக்கு மேல் தொகுதியில் சம்பந்தமில்லாத வெளிநபர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. கல்யாண மண்டபங்கள், விடுதிகள் ஆகியவற்றில் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட உள்ளனர். மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் அரசியல் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 6.2 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தயாராகி வருகின்றனர். அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய துணை ராணுவப் படையினரும், தமிழக காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions