“ஒரு அண்ணனா சொல்றேன், இந்த வயசை மிஸ் பண்ணாதீங்க!”: கேரளாவில் சூர்யா உருக்கம்!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் மே 14 வெளியாகவுள்ள நிலையில், கேரளாவில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு சூர்யா நெகிழ்ச்சியான அறிவுரை வழங்கினார்.
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருப்பு'. இப்படம் நாளை (மே 14) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையொட்டி, படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று (மே 12) கேரளாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு ரசிகர்களிடையே உரையாற்றினார்.
வித்தியாசமான சூர்யா
நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மாற்றமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். அவர் பேசுகையில்:
"கடந்த 5 ஆண்டுகளில் நான் நடித்த படங்களிலிருந்து இது மிகவும் வித்தியாசமான படம். முதல் பாதி உணர்ச்சிப்பூர்வமான (Emotional) பயணமாக இருக்கும். இரண்டாம் பாதி முழுக்க தியேட்டர் மொமென்ட்டுகளால் (Theatre Moments) நிரம்பி இருக்கும்.
ரசிகர்களுக்கு அன்புக்கட்டளை
தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு ஒரு அண்ணனாக உருக்கமான அறிவுரை ஒன்றையும் சூர்யா வழங்கினார். "நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நானும் நீங்கள் எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு அண்ணனாக சொல்கிறேன், இந்த வயதை மிஸ் பண்ணாதீர்கள். பெரிய கனவு காணுங்கள், எல்லாமே நிச்சயம் நனவாகும்" என்று உற்சாகப்படுத்தினார்.
நட்சத்திர பட்டாளம்
இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூர்யாவின் ஒரு முழுநீள எமோஷனல் மற்றும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.