போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் – முதலமைச்சர் விஜய் வழங்கினார்
போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை தடுப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் 2026ஆம் ஆண்டிற்கான காவல் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் விஜய் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 2,000 மாணவர்கள் நேரிலும், தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணொலி வாயிலாகவும் பங்கேற்று போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை தடுப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்களுக்கு 2026ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களை முதலமைச்சர் விஜய் வழங்கி கவுரவித்தார்.
மேலும், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி, கல்லூரிகளின் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்களுக்கும் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் பணியும் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் காணொலி வாயிலாக பார்வையிட்டார்.

0 Comments
No comments yet. Be the first to comment.