TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்.எல்.ஏ பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – அதிமுக

Share This Article:

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது பேச்சுக்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பான அரசின் நிலைப்பாட்டை சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியுள்ளது

ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்.எல்.ஏ பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – அதிமுக

ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்.எல்.ஏ. கருப்பையா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது பேச்சுக்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கருப்பையா, அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நீண்ட காலமாக மூடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அப்போது, “இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை” என அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்தக் கருத்து சட்டப்பேரவையிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Content image

ஜல்லிக்கட்டு குறித்து கடும் எதிர்ப்பு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்.எல்.ஏ. தெரிவித்த கருத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் வீரத்தின் அடையாளம் என்றும், அதனை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதி சோழவந்தான் தொகுதிக்குள் வருவதால், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. இவ்வாறு பேசியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Content image

அதிமுக வலியுறுத்தல்

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு குறித்து எம்.எல்.ஏ. பேசிய கருத்துக்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை சட்டப்பேரவையில் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. எம்.எல்.ஏ.வின் சர்ச்சைக்குரிய பேச்சு ஏன் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

2017 போராட்டம் மீண்டும் நினைவூட்டல்

2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னை மெரினாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தின் பின்னணியையும் அரசியல் கட்சிகள் தற்போது சுட்டிக்காட்டி வருகின்றன.

பல ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்படுவதற்காக நடைபெற்ற அந்த போராட்டம் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ. கருப்பையாவின் கருத்தைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை தொடர்ந்து அரசியல் ரீதியாகவும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions