TBC News
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை! பீகாரில் புதிய சரித்திரம்: முதல் முறையாக பாஜக-வைச் சேர்ந்தவர் முதலமைச்சராகப் பதவியேற்பு! செங்கப்பள்ளி சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட மக்கள் கடல்: கோவை தேசிய நெடுஞ்சாலையை அதிரவைத்த விஜய்! தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.1,13,000-ஐ கடந்து புதிய உச்சம்! மாலை அணிவித்து வாக்கு சேகரிப்பு: வில்லிவாக்கத்தில் கார்த்திக் மோகன் தீவிர பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பெரம்பலூரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி: காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.44 கோடி பணம் பறிமுதல்!

Share This Article:

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.44 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இரண்டு நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெரம்பலூரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி: காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.44 கோடி பணம் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது.


காரில் கொண்டு வரப்பட்ட பணத்தை எண்ணியபோது, மொத்தம் 2.44 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்தது. முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணத்தை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.


இந்தப் பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக காரில் இருந்த இரண்டு நபர்களைப் பிடித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆங்காங்கே இதுபோன்ற பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களைத் தடுக்க பறக்கும் படையினர் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Content image

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions