TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

முதலமைச்சர் ஆலோசனை..! தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

Share This Article:

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறப்பது மற்றும் புதிய கல்வி ஆண்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

முதலமைச்சர் ஆலோசனை..! தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மற்றும் கோடை விடுமுறை முடிவடையும் நிலையை ஒட்டி, பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

நடப்பு கல்வி ஆண்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை எப்போது திறக்கலாம், வெயிலின் தாக்கத்திற்கு ஏற்ப தேதிகளில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா என்பது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், பள்ளிகள் திறக்கப்படும் முதல் நா அன்றே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, பள்ளிகள் திறக்கப்படும் அதிகாரப்பூர்வ தேதி மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியாகும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசின் இந்த சுறுசுறுப்பான நடவடிக்கைகள் பொதுமக்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions