TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அண்ணாமலை விலகியதால் பா.ஜ.க.-விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை!" – புதிய கட்சித் தொடக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேட்டி!

Share This Article:

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியதால், பா.ஜ.க.-விற்கு எந்தவொரு பின்னடைவோ அல்லது பாதிப்போ ஏற்படப் போவதில்லை" என்று பா.ஜ.க. மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் மிகவும் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் புதிய அரசியல் இயக்கம் தொடங்க முழு உரிமை உண்டு என்றும் அவர் கருத்துப் பகிர்ந்துள்ளார்.

அண்ணாமலை விலகியதால் பா.ஜ.க.-விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை!" – புதிய கட்சித் தொடக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேட்டி!

நெலையில நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேட்டி:

நெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ.க.-வின் தற்போதைய உட்கட்சி நிலவரங்கள் மற்றும் அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசியதாவது:

"தமிழக பா.ஜ.க. என்பது தனிநபரால் இயங்கும் இயக்கம் அல்ல. இது பல கோடி தொண்டர்களையும், வலுவான கொள்கைகளையும் கொண்ட ஒரு தேசியப் பேரியக்கம் ஆகும். எனவே, அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியதால் பா.ஜ.க.-விற்கு எள்ளளவும் எந்தப் பாதிப்பும், தொய்வும் இருக்காது. கட்சி எப்போதும் போலத் தனது அடுத்தகட்டப் பணிகளை நோக்கி வீரியத்துடன் முன்னோக்கிச் செல்லும்.
அவர் தனியாகப் புதிய அரசியல் இயக்கம் தொடங்கத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்துக் கேட்கிறீர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள ஜனநாயக அமைப்பில், ஒரு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதற்கும், மக்கள் பணியாற்றுவதற்கும் இங்கு எல்லோருக்குமே சமமான உரிமை இருக்கிறது. அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை" என்று அவர் மிகவும் எதார்த்தமாகக் குறிப்பிட்டார்.

அரசியல் பின்னணி:

கடந்த சில மாதங்களாகவே தமிழக பா.ஜ.க. தலைமைகளுக்கு இடையே நிலவி வந்த பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் டெல்லி தலைமையின் அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, அண்ணாமலை பா.ஜ.க.-விலிருந்து விலகும் முடிவை எடுத்திருந்தார். அவர் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் புதிய அரசியல் களம் காண்பதற்கான பூர்வாங்க வேலைகளில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், நயினார் நாகேந்திரனின் இந்த தார்மீகப் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகக் கமலாலய வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions