TBC News
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை! பீகாரில் புதிய சரித்திரம்: முதல் முறையாக பாஜக-வைச் சேர்ந்தவர் முதலமைச்சராகப் பதவியேற்பு! செங்கப்பள்ளி சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட மக்கள் கடல்: கோவை தேசிய நெடுஞ்சாலையை அதிரவைத்த விஜய்! தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.1,13,000-ஐ கடந்து புதிய உச்சம்! மாலை அணிவித்து வாக்கு சேகரிப்பு: வில்லிவாக்கத்தில் கார்த்திக் மோகன் தீவிர பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலத் தொடக்கம்: ஏப்ரல் 28-ல் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்வு!

Share This Article:

உலகப் புகழ்பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா நேற்று (ஏப்ரல் 14, 2026) 'சாகை வார்த்தல்' நிகழ்ச்சியுடன் பக்திப் பெருக்குடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவின் தொடக்கமாக, கூவாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 7 கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கூழ் காய்ச்சி, அதனை மேளதாளங்களுடன் ஊர்வலமாகக் கொண்டு வந்து கோவிலில் படையலிட்டு வழிபட்டனர். இன்று (ஏப்ரல் 15) மாலை 'பந்தலடியில் காப்பு கட்டுதல்' நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலத் தொடக்கம்: ஏப்ரல் 28-ல் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்வு!

உலகப் புகழ்பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா நேற்று (ஏப்ரல் 14, 2026) 'சாகை வார்த்தல்' நிகழ்ச்சியுடன் பக்திப் பெருக்குடன் தொடங்கியது.

18 நாட்கள் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவின் தொடக்கமாக, கூவாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 7 கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கூழ் காய்ச்சி, அதனை மேளதாளங்களுடன் ஊர்வலமாகக் கொண்டு வந்து கோவிலில் படையலிட்டு வழிபட்டனர். இன்று (ஏப்ரல் 15) மாலை 'பந்தலடியில் காப்பு கட்டுதல்' நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விழாவின் முக்கியக் கால அட்டவணை:

  • ஏப்ரல் 14 (செவ்வாய்): சாகை வார்த்தல் (விழா தொடக்கம்).
  • ஏப்ரல் 27 (திங்கள்): மாலை கம்பம் நிறுத்துதல் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வு.
  • ஏப்ரல் 28 (செவ்வாய்): விழாவின் சிகர நிகழ்வான சுவாமி திருக்கண் திறத்தல். அன்று மாலை தமிழகம் மட்டுமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், மணப்பெண் கோலம் பூண்டு பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வார்கள்.
  • ஏப்ரல் 29 (புதன்): அதிகாலை கூத்தாண்டவர் திருத்தேர் வடம் பிடித்தல். மாலை பந்தலடியில் 'அரவான் பலி' மற்றும் திருநங்கைகள் தாலி அறுத்து, வளையல் உடைத்து வெள்ளைச் சீலை உடுத்தும் விதவைக்கோலச் சடங்குகள் நடைபெறும்.
  • மே 1 (வெள்ளி): தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் விழா நிறைவு பெறுகிறது.

மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றிபெற அரவான் தன்னைத்தானே பலிகொடுத்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேர்தல் களம் ஒருபுறம் அனல் பறந்தாலும், லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் கூடும் இந்த விழாவிற்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions