ஓட்டு வேட்டை: விருத்தாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்துக்காக கனிமொழி எம்.பி. அனல் பறக்கும் பரப்புரை!
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, இன்று கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையின் போது பேசிய கனிமொழி எம்.பி., "கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மக்கள் மீது கொண்ட அன்பையும், மாநில உரிமைகளுக்காகத் தேமுதிக எடுத்துள்ள உறுதியான முடிவையும் பாராட்டி, விருத்தாச்சலம் மக்கள் மீண்டும் ஒருமுறை வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பிரேமலதா அவர்களுக்கு வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். 2006-ல் இதே தொகுதியில் கேப்டன் பெற்ற வெற்றியை நினைவுகூர்ந்த அவர், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரவும், தொகுதி மேம்பாட்டிற்கும் தேமுதிகவின் வெற்றி அவசியம் என வலியுறுத்தினார். கனிமொழியின் வருகையையொட்டி விருத்தாச்சலத்தில் திமுக மற்றும் தேமுதிக தொண்டர்கள் அலைகடலெனத் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.