TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"குதிரை பேரம் வேண்டாம்.. தேர்தலை மீண்டும் நடத்துவதே தீர்வு!" - தொங்கு சட்டசபையால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வலுக்கும் கோரிக்கை!

Share This Article:

எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், அமையப்போகும் அரசு நிலையற்றதாகவே இருக்கும் என்பதால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, பண விநியோகமில்றி மீண்டும் ஒரு தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

"குதிரை பேரம் வேண்டாம்.. தேர்தலை மீண்டும் நடத்துவதே தீர்வு!" - தொங்கு சட்டசபையால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வலுக்கும் கோரிக்கை!

நிலையற்ற அரசியல் சூழல்

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஒரு 'தொங்கு சட்டசபை' சூழலை உருவாக்கியுள்ளது. 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக, 73 இடங்களைப் பெற்றுள்ள திமுக என யாருக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லை. இத்தகைய சூழலில், சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று அமையவிருக்கும் எந்தவொரு அரசாங்கமும் பல்வேறு இழுபறிகள், நிபந்தனைகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தங்களால் நிலையற்றதாகவே இருக்கும் என்ற அச்சம் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

குடியரசுத் தலைவர் ஆட்சிக்குக் கோரிக்கை

"மெஜாரிட்டி எண்கள் கிடைக்காத நிலையில், வலுக்கட்டாயமாக அமைக்கப்படும் அரசு மக்களின் உண்மையான விருப்பத்தைப் பிரதிபலிக்காது. எனவே, தமிழகத்தில் தற்காலிகமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என்ற குரல்கள் சமூக வலைதளங்களிலும், நடுநிலையாளர்களிடமிருந்தும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இழுபறி நீடித்தால் ஆளுநர் இந்த அதிரடி முடிவை எடுக்கவும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

"மறுதேர்தலே தீர்வு" - கடுமையான நிபந்தனை

புதிய தேர்தலை நடத்துவதே சிறந்த வழி என்று வாதிடும் தரப்பினர், ஒரு மிக முக்கியமான நிபந்தனையையும் முன்வைக்கின்றனர். ‘வாக்குக்குப் பணம் இல்லை’ என்ற விதியை மிகக் கடுமையான அமலாக்கத்துடன் தேர்தல் ஆணையம் செயல்படுத்த வேண்டும். கடந்த தேர்தலில் பண விநியோகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், ராணுவம் அல்லது மத்தியப் படைகளின் நேரடி கண்காணிப்பில் பண நடமாட்டமின்றி தேர்தல் நடந்தால் மட்டுமே யாருக்கு உண்மையான மக்கள் ஆதரவு இருக்கிறது என்பது தெரியவரும்.

குதிரை பேரம் குறித்த அச்சம்

சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளைத் தங்கள் பக்கம் இழுக்கப் பெரிய கட்சிகள் "குதிரை பேரத்தில்" ஈடுபட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இது ஜனநாயகத்தின் மாண்பைச் சிதைக்கும் செயல் என்பதால், மக்கள் தீர்ப்புத் தெளிவாக இல்லாத போது மீண்டும் மக்களிடமே செல்வது (Re-election) தான் முறையானது என ஒரு சாரார் வாதிடுகின்றனர்.


தமிழகத்தில் மே 7-ம் தேதி விஜய் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வரும் நிலையில், இந்த 'மறுதேர்தல்' கோரிக்கை புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆளுநரின் அடுத்தகட்ட நகர்வு மற்றும் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டைப் பொறுத்தே தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் அமையும்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions