TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"என்னை யாரும் பார்க்கவில்லை.. என் ஆணவம் உடைந்தது!" - பெங்களூரு நிகழ்வில் ரஜினிகாந்த் உருக்கமான பேச்சு!

Share This Article:

பெங்களூருவில் நடைபெற்ற 'வாழும் கலை' அறக்கட்டளை விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தான் முதன்முறையாக அங்கு சென்றபோது மக்கள் தன்னை கண்டுகொள்ளாதது தனது ஆணவத்தை எப்படி உடைத்தது என்பது குறித்து கலகலப்பாகப் பேசினார்.

"என்னை யாரும் பார்க்கவில்லை.. என் ஆணவம் உடைந்தது!" - பெங்களூரு நிகழ்வில் ரஜினிகாந்த் உருக்கமான பேச்சு!

பெங்களூருவில் உள்ள 'வாழும் கலை' (Art of Living) அறக்கட்டளையின் ஆண்டு விழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினார்.


நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், தான் முதன்முறையாக அந்த அறக்கட்டளைக்குச் சென்ற அனுபவத்தைக் குறிப்பிட்டார்:

"குருதேவ் (ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்) அவர்கள் தனது பக்தர்களைப் பார்க்க என்னையும் உடன் அழைத்துச் சென்றார். பொதுவாக நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னைச் சூழ்ந்து கொள்வார்கள். ஆனால் அங்கு வந்தவர்கள் யாரும் என்னைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை."


தொடர்ந்து பேசிய அவர், "நான் கைகாட்டி 'ஹாய்' சொன்னால் கூட ஒருவரும் என்னைக் கவனிக்கவில்லை. அனைவரும் குருதேவ் மீதே முழு கவனமாக இருந்தனர். அந்தத் தருணம் என்னுடைய ஆணவத்தை உடைத்தது," என்று மிகவும் எதார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்த வெளிப்படையான பேச்சு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions