மாலத்தீவில் பெரும் சோகம்: ஆழ்கடல் குகை ஆராய்ச்சியில் ஈடுபட்ட 5 இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் கடலில் மூழ்கிப் பலி!
மாலத்தீவு வரலாற்றிலேயே மிக மோசமான ஆழ்கடல் விபத்தாகக் கருதப்படும் ஒரு சம்பவத்தில், கடலுக்கு அடியில் உள்ள குகையை ஆய்வு செய்யச் சென்ற புகழ்பெற்ற கடல்சார் உயிரியலாளர் உட்பட 5 இத்தாலியப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாலத்தீவின் வவூ அடோல் (Vaavu Atoll) பகுதியில் உள்ள அலிமதா தீவு அருகே இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாலத்தீவில் பெரும் சோகம்: ஆழ்கடல் குகை ஆராய்ச்சியில் ஈடுபட்ட 5 இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் கடலில் மூழ்கிப் பலி!
மாலத்தீவு வரலாற்றிலேயே மிக மோசமான ஆழ்கடல் விபத்தாகக் கருதப்படும் ஒரு சம்பவத்தில், கடலுக்கு அடியில் உள்ள குகையை ஆய்வு செய்யச் சென்ற புகழ்பெற்ற கடல்சார் உயிரியலாளர் உட்பட 5 இத்தாலியப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாலத்தீவின் வவூ அடோல் (Vaavu Atoll) பகுதியில் உள்ள அலிமதா தீவு அருகே இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் நான்கு பேர் இத்தாலியின் ஜெனோவா பல்கலைக்கழகத்தைச் (University of Genoa) சேர்ந்தவர்கள் என அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
பலியானவர்கள் விபரம்:
- மோனிகா மான்டிஃபால்கோன் (51): ஜெனோவா பல்கலைக்கழகத்தின் சூழலியல் மற்றும் கடல்சார் உயிரியல் பேராசிரியர்.
- ஜியோர்ஜியா சோமாகல் (22): மோனிகாவின் மகள் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மாணவி.
- முரியல் ஒடெனினோ (31): கடல்சார் சுற்றுச்சூழல் ஆய்வாளர்.
- ஃபெடெரிகோ குவால்தேரி (31): கடல்சார் உயிரியல் பட்டதாரி மற்றும் டைவிங் பயிற்சியாளர்.
- ஜியான்லுகா பெனெடெட்டி (44): இத்தாலிய டைவிங் வழிகாட்டி மற்றும் படகு மேலாளர்.
விபத்து நடந்தது எப்படி? 'டியூக் ஆஃப் யார்க்' (Duke of York) என்ற சொகுசு உல்லாசப் படகில் மொத்தம் 25 பேர் கொண்ட குழுவினர் மாலத்தீவுக்குப் பயண மேற்கொண்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை காலையில், இந்த 5 பேரும் வவூ அடோல் பகுதியில் சுமார் 50 மீட்டர் (164 அடி) ஆழத்தில் உள்ள ஆபத்தான நீருக்கடியில் இருக்கும் குகை அமைப்பை (Underwater Cave) ஆராய்வதற்காக கடலுக்குள் இறங்கியுள்ளனர். மாலத்தீவில் வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் 30 மீட்டர் ஆழம் வரை மட்டுமே டைவிங் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில், இவர்கள் விதியை மீறி அதிக ஆழத்திற்குச் சென்றுள்ளனர்.
மதிய நேரமாகியும் அவர்கள் மீண்டும் தண்ணீருக்கு மேலே வராததால் படகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து கடலோரக் காவல் படைக்குத் தகவல் கொடுத்தனர்.
மீட்புப் பணியில் தொய்வு: தகவலறிந்து விரைந்த மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை (MNDF) மற்றும் கடலோரக் காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், டைவிங் பயிற்சியாளர் ஜியான்லுகா பெனெடெட்டியின் உடல் மட்டும் குகையின் நுழைவாயில் அருகே கண்டெடுக்கப்பட்டது. அவரது ஆக்சிஜன் சிலிண்டர் முற்றிலும் தீர்ந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
மீதமுள்ள 4 பேரின் உடல்களும் சுமார் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள அதே குகையின் உட்பகுதியில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும், தற்போது அந்தப் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவுவதால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இத்தாலிய டைவிங் நிபுணர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள நிலையில், வானிலை சீரானவுடன் உடல்களை மீட்கும் பணி மீண்டும் தொடங்கும் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.