மேற்கு வங்கத்தில் அதிரடி: மதரஸாக்கள் உட்பட அனைத்துக் கல்விக்கூடங்களிலும் 'வந்தே மாதரம்' கட்டாயம்! அரசு உத்தரவு!
மேற்கு வங்காளத்தில் உள்ள மதரஸாக்கள் (இஸ்லாமியக் கல்விக்கூடங்கள்) உட்பட அனைத்து அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயமாகப் பாட வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசாணையின் முக்கிய விவரங்கள்:
முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான மேற்கு வங்க அரசு கடந்த வாரம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயமாக்கிய நிலையில், தற்போது அந்த உத்தரவு மதரஸாக்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து மதரஸாக்களுக்கும் பொருந்தும: மேற்கு வங்க சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரஸா கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மாடல் மதரஸாக்கள், அரசு உதவி பெறும் மதரஸாக்கள், அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறாத மதரஸாக்கள் மற்றும் சிசு சிக்ஷா கேந்திராக்கள் ஆகிய அனைத்திற்கும் இந்த உத்தரவு உடனடியாகப் பொருந்தும்.
- காலை வழிபாட்டுப் பாடல்: தினசரி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் (Morning Assembly Prayers), மாணவர்கள் அனைவரும் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவதைக் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என மதரஸா கல்வி இயக்ககம் (Directorate of Madrasah Education) உத்தரவிட்டுள்ளது.
- நோக்கம்: மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான வழிபாட்டு முறையைக் கொண்டு வரவும், மாணவர்களிடையே தேசபக்தியை வளர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) அரசு கொண்டு வந்திருந்த 'பங்களார் மாட்டி பங்களார் ஜொல்' என்ற மாநிலப் பாடலுக்குப் பதிலாக, தற்போது 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.