TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி அறிவிப்பு!

Share This Article:

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி அறிவிப்பு! சென்னை: தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி அறிவிப்பு!

வேட்பாளர் மாற்றம் முன்னதாக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு, அந்தத் தொகுதியில் விசிக வேட்பாளராக மறைந்த தலைவர் இளையபெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார் என அவர் தெரிவித்துள்ளார்.


பின்வாங்கியது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது இந்தத் திடீர் முடிவிற்கான காரணங்களை விரிவாக விளக்கினார்:

Content image

யுக்தி மாற்றம்: "யுத்த காலத்தில் முன்னே செல்வதும், பின்வாங்குவதும் ஒரு போர் யுக்தி. அந்த அடிப்படையில் எனது நிலைப்பாட்டைத் தள்ளிவைக்கிறேன். நான் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை, அதை மாற்றி வைக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.


கூட்டணி நலன்: தான் சட்டமன்றத்திற்குள் நுழைய விரும்புவதை வைத்து, துணை முதல்வர் பதவி மற்றும் கூட்டணி ஆட்சி குறித்துப் பரப்பப்பட்ட தேவையற்ற வதந்திகள், கூட்டணியின் நலனைப் பாதிக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.


Content image

பதவி ஆசை இல்லை: "எனக்கு பதவி ஆசை கிடையாது. கூட்டணி ஆட்சியை நான் கோர மாட்டேன் என ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன். எனது நோக்கத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகச் சிலர் கருத்து பரப்பியதாலேயே இந்தப் பின்வாங்கல்," என்றார்.


அரசியல் சூழல் மற்றும் எதிர்பார்ப்பு

2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் சூழல் மாறும் என்றும், சமூக நீதி அரசியலைச் சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் எனத் தான் விரும்பியதாகவும் அவர் கூறினார். இருப்பினும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று வலுவான ஆட்சியை அமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Content image

தொண்டர்களுக்கு வேண்டுகோள்

தன் மீதான விமர்சனங்களைத் தகர்க்கவே இந்தப் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகவும், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் முழு வீச்சில் பணியாற்றி வெற்றியைக் கனிவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags: tbcnews
Social:

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions