TBC News
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை! பீகாரில் புதிய சரித்திரம்: முதல் முறையாக பாஜக-வைச் சேர்ந்தவர் முதலமைச்சராகப் பதவியேற்பு! செங்கப்பள்ளி சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட மக்கள் கடல்: கோவை தேசிய நெடுஞ்சாலையை அதிரவைத்த விஜய்! தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.1,13,000-ஐ கடந்து புதிய உச்சம்! மாலை அணிவித்து வாக்கு சேகரிப்பு: வில்லிவாக்கத்தில் கார்த்திக் மோகன் தீவிர பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்! உண்மைகளை உடைக்கத் தயாராகும் சங்கீதா? - ஏப்ரல் 20-ல் விசாரணை!

Share This Article:

நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்! உண்மைகளை உடைக்கத் தயாராகும் சங்கீதா? - ஏப்ரல் 20-ல் விசாரணை! சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களாகவே இணையதளங்களில் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில், இவர்களது விவாகரத்து வழக்கு தொடர்பான ஒரு முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்! உண்மைகளை உடைக்கத் தயாராகும் சங்கீதா? - ஏப்ரல் 20-ல் விசாரணை!

நீதிமன்ற விசாரணை:

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு, வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் (Chengalpattu Family Court) விசாரணைக்கு வரவுள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வை ஒட்டுமொத்த கோலிவுட்டும் உற்று நோக்கி வருகிறது.

சங்கீதாவின் அதிரடித் திட்டம்:

இந்த வழக்கின் விசாரணையின் போது, நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனு மற்றும் அதில் கூறப்படும் காரணங்களைப் பொறுத்து, சங்கீதா ஒரு அதிரடி முடிவை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, தன் மீது ஏதேனும் தவறான குற்றச்சாட்டுகளோ அல்லது அவதூறு பரப்பும் வகையிலான கருத்துக்களோ அந்த மனுவில் இடம் பெற்றால், அதனைச் சட்டரீதியாக எதிர்கொள்வதுடன் ஊடகங்களைச் சந்தித்து உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இத்தனை காலமாகத் தனது மௌனத்தைக் காத்து வந்த சங்கீதா, இப்போது முதல்முறையாகப் பொதுவெளியில் பேசத் தயாராகி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ, ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும் நீதிமன்ற விசாரணையில்தான் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions