TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"நெருக்கடி நேரத்தில் உடனிருந்தோம்.. இதுதான் கைம்மாறா?" - காங்கிரஸை நோக்கி டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி! துரோகம் என திமுக காட்டம்!

Share This Article:

காங்கிரஸ் கட்சி இக்கட்டான நிலையில் இருந்தபோதெல்லாம் உற்ற தோழனாக திமுக இருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள டி.ஆர்.பாலு, ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலினின் தியாகத்தை காங்கிரஸ் மறந்துவிட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

"நெருக்கடி நேரத்தில் உடனிருந்தோம்.. இதுதான் கைம்மாறா?" - காங்கிரஸை நோக்கி டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி! துரோகம் என திமுக காட்டம்!

காங்கிரஸுக்கு எதிராகப் பாய்ந்த திமுக

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க, காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை அளிக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நகர்வு, கடந்த இரண்டு தசாப்தங்களாகத் தேசிய அளவில் காங்கிரஸுக்கு முதுகெலும்பாக இருந்த திமுகவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கை, காங்கிரஸ் கட்சியின் "அரசியல் நன்றியுணர்வை" கேள்விக்குறியாக்கியுள்ளது.

நெருக்கடி காலத்தில் கைகொடுத்த திமுக

டி.ஆர்.பாலு தனது அறிக்கையில் மிக உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளதாவது:

"காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி உண்டான ஒவ்வொரு சூழலிலும், உற்ற தோழனாக நிபந்தனையின்றி உடனிருந்தது திமுக. அதற்காக நாங்கள் அரசியல் ரீதியாகக் கொடுத்த விலை மிக அதிகம். பல விமர்சனங்களை இன்முகத்துடன் ஏற்றோம். ஆனால், இன்று ஒரு தேர்தல் தோல்வியைக் கண்டவுடன், எங்களை அம்போவென விட்டுவிட்டுபுதிய அதிகார மையத்தை நோக்கி காங்கிரஸ் ஓடுவது முறையா?"


Content image

ராகுல் காந்தியை முன்மொழிந்த ஸ்டாலின்

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிய வடமாநிலக் கட்சிகளே தயங்கிய சூழலில், சென்னையில் கலைஞர் சிலை திறப்பு விழாவில் வைத்து "ராகுல் காந்தியே வருக! நாட்டின் பிரதமர் ஆக வருக!" என முதலில் முழக்கமிட்டவர் மு.க.ஸ்டாலின் என்பதை டி.ஆர்.பாலு நினைவுபடுத்தியுள்ளார். "கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் (2019 மற்றும் 2024) தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான எம்.பி-க்களைக் காங்கிரஸுக்கு அனுப்பி வைத்தது திமுக கூட்டணிதான். இந்த உண்மைகளைக் காங்கிரஸ் மேலிடம் மறந்துவிட்டதா?" என அவர் சாடியுள்ளார்.

நன்றியற்ற செயலா?

"பாஜகவின் குதிரை பேர அரசியலை நாடு முழுவதும் காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் அதே போன்ற ஒரு சூழலை உருவாக்கி, குறுக்கு வழியில் அதிகாரத்தில் பங்கு பெற காங்கிரஸ் துடிப்பது எந்த விதத்தில் நியாயம்?" என்று டி.ஆர்.பாலு தனது அறிக்கையில் கடுமையாகப் பதிவிட்டுள்ளார். இந்த அறிக்கை திமுக - காங்கிரஸ் இடையிலான 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி'யின் இறுதிக்காலத்தை அறிவிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


அரசியலில் 'நன்றி' என்ற சொல்லுக்கு இடமில்லை என்பதை காங்கிரஸின் தற்போதைய நகர்வுகள் காட்டுவதாக திமுகவினர் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். டி.ஆர்.பாலுவின் இந்த அறிக்கை, அகில இந்திய அளவில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியிலும் விரிசல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions