மாலத்தீவில் கிளாமர் மழையில் ராகுல் ப்ரீத் சிங்: திருமணத்திற்கு பின்னும் குறையாத கவர்ச்சி - வைரல் போட்டோஸ்!
திருமணத்திற்குப் பிறகும் துளியும் குறையாத கவர்ச்சியில், ராகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும், ஒட்டுமொத்த ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று', சூர்யாவுடன் 'என்.ஜி.கே' மற்றும் சிவகார்த்திகேயனுடன் 'அயலான்' போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
திருமணத்திற்கு பின்னும் தொடரும் கவர்ச்சி வேட்டை
சமீபத்தில் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன பிறகும், ராகுல் ப்ரீத் சிங் சினிமா மற்றும் மாடலிங் துறையில் முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போதெல்லாம் தாராள கிளாமர் உடைகளில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.
மாலத்தீவில் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
தற்போது மாலத்தீவுக்கு இன்பச்சுற்றுலா சென்றுள்ள ராகுல் ப்ரீத் சிங், அங்கிருந்து செம ஹாட் உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடற்கரை பின்னணியில், கட்டுக்கோப்பான தனது உடலழகை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ்கள் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.
இணையத்தை கலக்கும் வைரல் ஸ்டில்கள்
"வயசானாலும் உங்க அழகும் கவர்ச்சியும் வேற லெவல்!" என ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்களை குவித்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் துணிச்சலாக கிளாமர் காட்டும் ராகுல் ப்ரீத்தின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் செம ட்ரெண்டிங்கில் உள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.