TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை!" - கோயம்புத்தூர் சிறுமி கொலை சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!

Share This Article:

கோயம்புத்தூர் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது ஆழந்த இரங்கலையும், கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை!" - கோயம்புத்தூர் சிறுமி கொலை சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை:

"கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், கடுமையான அதிர்ச்சியையும் அளிக்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்குச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தரத் தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

சம்பவத்தின் பின்னணி மற்றும் போலீஸ் நடவடிக்கை:

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி, கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். இதுகுறித்து உறவினர்கள் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தேடி வந்தனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம், அந்தச் சிறுமி அப்பகுதியில் உள்ள குளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன் குமார் ரெட்டி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுக் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 2 நபர்களைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் விவாதம்:

புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே கோவையில் இத்தகைய கொடூர சம்பவம் நடந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் இந்தச் சம்பவத்தில் உடனடி கவனம் செலுத்தி, "சட்டத்தின் முன் யாரும் தப்ப முடியாது; கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும்" என உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions