TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"மக்களுக்கு தூங்கா இரவுகள்... தொழிறசாலைகள் முடக்கம்!" - அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!!

Share This Article:

தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான மின் தட்டுப்பாடு மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்களும், சிறு, குறு தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

"மக்களுக்கு தூங்கா இரவுகள்... தொழிறசாலைகள் முடக்கம்!" - அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!!

"புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களின் உறுதியற்ற நடவடிக்கை" - ஈபிஎஸ் சாடல்!

தமிழகத்தில் பரவலாக அதிகரித்து வரும் மின் தட்டுப்பாடு மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டுப் பிரச்சினைகள் குறித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ளவர்களின் திட்டமிடப்படாத, உறுதியற்ற நிர்வாக நடவடிக்கைகளே இந்தத் தற்போதைய மின் நெருக்கடிக்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


தூங்கா இரவுகளாக மாறிய கொடுமை: பொதுமக்கள் அவதி

தற்போது நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கத்திற்கு இடையே, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

எடப்பாடி பழனிசாமி அறிக்கை: "முறையான அறிவிப்பு ஏதுமின்றி நள்ளிரவிலும், அதிகாலையிலும் செய்யப்படும் மின்வெட்டால், பொதுமக்கள் தங்களது தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர். சாமானிய மக்களுக்கு இரவு நேரங்கள் தூங்கா இரவுகளாக மாறியிருப்பது மிகுந்த கொடுமையான ஒன்றாகும்" என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.


சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்!

பொதுமக்கள் மட்டுமன்றி, இந்தத் தொடர் மின்வெட்டு காரணமாகத் தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிறசாலைகள் (MSMEs) கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிவிக்கப்படாத மின்தடையால் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் நிறுவனங்களுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக எச்சரித்துள்ளார். எனவே, அரசு உடனடியாகத் தலையிட்டு மின் உற்பத்தியைச் சீரமைக்கவும், தங்குதடையின்றி மின்சாரம் வழங்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions